districts

img

காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 21 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் மேலமுக்கூட்டில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுப்பட்டனர்.

உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை உறுதிபடுத்திட வும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின்  முயற்சியை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தி டக் கோரியும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சிம்சன் தலைமை வகித்தார். 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்டப் பொருளாளர் எம்.செல்லப்பன், மாநிலக் குழு உறுப்பினர் பி. குணசுந்தரி, விவசாயத் தொழிலாளர் சங்க  மாவட்டத் தலைவர் காபிரியேல் உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினர். செம்பனார் கோவில் ஒன்றியச் செயலாளர் பி.தெட்சிணா மூர்த்தி நன்றி கூறினார்.